கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாகவும் மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 75 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 33 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 15 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 40 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 49 மனுக்களும் என மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 6 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 870 வீதம் ரூ.29 ஆயிரத்து 220 மதிப்பீட்டிலான விலையில்லா சலவைப் பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story