காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 24 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 24 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவி  வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்
x

காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா வழங்கினார்.

காஞ்சிபுரம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், காரணை மற்றும் இராவத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 2 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story