சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x

சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தினர் சங்க செயலாளர் குருசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் மின்கட்டண உயர்வு தொடர்பான 5 அம்ச கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பென்டகன்ஜவகர், ஜெய்சங்கர், வசந்தன் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதில் வருகிற 16-ந் தேதி மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.


Next Story