சென்னையில் நாளை கூடுகிறது பா.ம.க. பொதுக்குழு


சென்னையில் நாளை கூடுகிறது பா.ம.க. பொதுக்குழு
x

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க. வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.


Next Story