தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது - சினேகன் பேட்டி


தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது - சினேகன் பேட்டி
x

சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நிறைவு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் சினேகன் கலந்து கொண்டார்.

சேலம்:

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மதுவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு, விவசாயிகளின் நலனுக்காக விவசாய சங்கங்களின் மாநாட்டில் போடப்பட்டுள்ள 29 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு கிராமம், கிராமமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரதிநிதிகளை நியமித்து வருகிறோம். அடுத்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வீரியம் அனைவருக்கும் தெரியும்.

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கொடுக்கும் குரலை விட மக்கள் நீதி மய்யத்தின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது. எங்கள் கட்சிக்கு ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள், ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான், என்றார்.


Next Story