தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கிருஷ்ணசமுத்திரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் பாபு (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இவருடைய அண்ணன் ரமேஷுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் பாபு தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷுக்கும் பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது ரமேஷ், மகன் நீலகண்டன், மகள் மகேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் பாபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story