நடைமுறைக்கு சாத்தியமான உண்மை அறிக்கையை அளித்து இருக்கிறோம்: எடப்பாடி பழனிசாமி


நடைமுறைக்கு சாத்தியமான உண்மை அறிக்கையை அளித்து இருக்கிறோம்: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 24 March 2024 3:43 AM GMT (Updated: 24 March 2024 6:43 AM GMT)

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

பிரசாரத்தை தொடங்கும் முன்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். தமிழர்_உரிமை_மீட்போம்! தமிழ்நாடு_காப்போம்!

நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்!" என்று பதிவிட்டுளார்.


Next Story