முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!


முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!
x

இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

சென்னை,

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார். இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்ப்பாயம் அமைத்துத் தந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு பணிகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story