பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்... டெல்லி புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்... டெல்லி புறப்பட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Dec 2022 5:46 AM GMT (Updated: 5 Dec 2022 5:47 AM GMT)

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

சென்னை,

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.


Next Story