வாழப்பாடி அருகே கார் மீது தனியார் மகளிர் கல்லூரி பஸ் மோதல் - ஒருவர் பலி


வாழப்பாடி அருகே கார் மீது தனியார் மகளிர் கல்லூரி பஸ் மோதல் - ஒருவர் பலி
x

வாழப்பாடி அருகே கார் மீது தனியார் மகளிர் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழப்பாடி,

சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது50). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரும், இவரது மனைவி சுபஸ்ரீ இருவரும், இவர்களின் மகளை, சென்னையில் இருந்து காரில் அழைத்துச் சென்று கோவை கல்லூரியில் விட்டுவிட்டு இன்று காலை, மீண்டும் சென்னை நோக்கி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.

வாழப்பாடி அருகே ஆத்துமேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சேலம் அம்மாபேட்டை தனியார் மகளிர் கல்லூரி பஸ் கார் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த இவரது மனைவி சுபஸ்ரீயை மீட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள், சிகிச்சைக்காக, சேலம் அம்மாபேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story