பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - 4 கிராமங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்


பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - 4 கிராமங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்
x

4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 180-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னையை அடுத்து 2-வது பசுமைவெளி புதிய விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் ஏகனாபுரம், நாகப்பட்டு, மேலேரி, நெல்வாய் உள்ளிட்ட 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 180-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story