புழல் ஜெயில் கைதி சாவு


புழல் ஜெயில் கைதி சாவு
x

புழல் ஜெயில் கைதி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சென்னை

சென்னை அடுத்த தாம்பரம் சானிடோரியம் 2-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 47). இவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை வேப்பேரியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று கைதியாக புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 15-ந் தேதி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமார் மூச்சு திணறலால் இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story