ஏடிஎம்-யில் பணம் வராத ஆத்திரம்... கண்ணாடியை அடித்து நொறுக்கிய ஆட்டோ ஓட்டுநர்

நெல்லையில் ஏடிஎம்-மில் பணம் வராததால், ஆத்திரத்தில் கதவு கண்னாடியை உடைத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கொக்கிரக்குளம் பகுதியில் மதுபோதையில் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முற்பட்டபோது பணம் வராததால், ஆத்திரம் அடைந்த அவர், ஏடிஎம்-மின் கதவு கண்ணாடியை உடைத்துச்சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





