ரெயில்வே தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்குவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்


ரெயில்வே தேர்வு: தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்குவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x

போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரெயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8-ந்தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700 கிலோ மீட்டருக்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும். 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது சாத்தியமல்ல.

700 கிலோ மீட்டருக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும். மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது.

மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரெயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story