அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் சென்னை வருகை


அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் சென்னை வருகை
x
தினத்தந்தி 14 Jun 2023 12:25 AM GMT (Updated: 14 Jun 2023 12:55 AM GMT)

அமைச்சர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது. அவரது வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்து அழைத்துச்சென்றதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், அமைச்சர் செந்தில்பாலாஜியை காண மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் மருத்துவமனை பரபரப்புடன் கானப்பட்டது.

இதற்கிடையில் அமைச்சர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டதும், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அறிந்த செந்தில் பாலாஜியின் மனைவி மற்று உறவினர்கள், கரூரில் இருந்து சென்னை புறப்பட்டுச்சென்றனர். அமைச்சர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story