சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 5 முதியவர்கள் மீட்பு


சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 5 முதியவர்கள் மீட்பு
x

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 5 முதியவர்களை போலீசார் மீட்டனர்.

சென்னை

ரெயில் நிலையங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகள், முதியோர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் ஒப்படைத்து வருகின்றனர். நேற்று சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரியும் முதியவர்களை மீட்கும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டனர்.

அதன்படி, கமலேஷ் குமாரி (வயது 75), சமீரா அப்ரோஜ் (70), புஷ்பா (60), சுரேந்தர் சவுத்ரி (57), சவ்ஹான் (50) ஆகிய 5 பேரை மீட்டனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை ரெயில்வே போலீசார் வாங்கி கொடுத்தனர். பின்னர், அவர்கள் 5 பேரையும் முதியோர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story