ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவை மறுஆய்வு செய்க"-காவல்துறை சார்பில் சீராய்வு மனு


ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவை மறுஆய்வு செய்க-காவல்துறை சார்பில் சீராய்வு மனு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 29 Sep 2022 7:58 AM GMT (Updated: 29 Sep 2022 8:33 AM GMT)

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி-காவல்துறை சார்பில் ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், விசிக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் ஐகோர்ட்டில் சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் காவல் துறை தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story