மயிலாடுதுறையில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக செம்பனார்கோவில், திருக்கடையூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதே போல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





