சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்ேபாது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த ஜெசிந்தா மேரி பிரான்சிஸ் (வயது 25) என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஆடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த பெண் ஜெசிந்தா மேரியை கைது செய்தனர். மேலும் இந்த தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story