சாலைகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சாலைகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x

கடைகளில் 2 குப்பை தொட்டிகள் கட்டாயம், சாலைகளில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 83 ஆயிரத்து 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 33 ஆயிரத்து 69 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மீதமுள்ள கடைகளில் 2 குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்க கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும்.

நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story