தங்க பத்திரம் விற்பனை


தங்க பத்திரம் விற்பனை
x
தினத்தந்தி 20 Jun 2023 7:00 PM GMT (Updated: 21 Jun 2023 12:07 PM GMT)

தேனி கோட்டத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகங்களில் தங்கம் பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது என்று கோட்ட கண்காணிப்பாளர் கூறினார்.

தேனி

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. அதன்படி தேனி கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. நாளை மறுநாள் வரை இந்த விற்பனை நடக்கிறது. ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்க பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.5,926 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி, 6 மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் மதிப்புக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story