கொலு பொம்மைகள் விற்பனை அமோகம்


கொலு பொம்மைகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 27 Sep 2023 10:45 PM GMT (Updated: 27 Sep 2023 10:46 PM GMT)

நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மரம், இரும்பினால் ஆன 'ரேக்கு'களில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு பூஜை செய்து வழிபாடு நடத்துவர். இந்நிலையில் பழனி நகரில் உள்ள கடைகளில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை தொடங்கியது. குறிப்பாக பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து அடிவாரத்தை சேர்ந்த பொம்மை வியாபாரி நாகராஜ் கூறுகையில், நவராத்திரியை முன்னிட்டு தற்போது இருந்தே கொலு பொம்மை விற்பனை தொடங்கியுள்ளது. வெளியூர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களும் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர். அனைத்து வகையான சாமி பொம்மைகள், வாத்தியம் வாசிக்கும் பொம்மைகள், திருமண நிகழ்ச்சி, கிருஷ்ணர் திருவிளையாடல் பொம்மைகள், போர் படை பொம்மைகள் என பல்வேறு வகையான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. குறைந்தது ரூ.300 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஒரு செட் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


Next Story