சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்: சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை


சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்: சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
x

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.

சென்னை

சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், 2023-2024-ம் ஆண்டுக்கான புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும், மூன்றாவது முழுமைத் திட்டம், தொலைநோக்கு, நில சேர்மம், தள பரப்பு குறியீடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையம், நீதிமன்ற வழக்குகள் நிலவரம், வரன்முறை திட்டம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தலைமை திட்ட அமைப்பாளர்கள், முதுநிலை திட்ட அமைப்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story