பள்ளி மாணவர் தற்கொலை


பள்ளி மாணவர் தற்கொலை
x

பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி திருவேங்கடபுரத்தை சேர்ந்த பெருமாள்- காத்தாயி தம்பதியின் மகன் மாதவன்(14). இவர் செவந்திப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story