விழுப்புரம், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்


விழுப்புரம், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்
x
தினத்தந்தி 30 Nov 2023 1:52 AM GMT (Updated: 30 Nov 2023 2:16 AM GMT)

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல விழுப்புரம், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story