இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்


x

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரம் கொண்டுவரப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் சங்கு மூடைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்கு பைகளில் இருந்த சுமார் 30 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தொண்டியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதுடன் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு சுமார் 4 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என்றும் ராமேசுவரத்தில் உள்ள வியாபாரி ஒருவரிடம் கொடுத்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.


Next Story