செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - இன்று விசாரணை


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - இன்று விசாரணை
x

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்து வந்தார். அவருக்கு எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.இதையடுத்து, 8 மாதங்களாக சிறையில் உள்ள சூழலில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்..இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சருக்கு செந்தில் பாலாஜி அனுப்பினார். இதையடுத்து ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் அனுப்பிவைத்தார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அமைச்சராக இருப்பவர் வெளியில் வந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை கலைப்பார் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து நீதிமன்றங்களில் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ஆகவே அதனை ஒட்டி ஜாமீன் மனு மீதான விசாரணையில் தனது வாதங்களை செந்தில்பாலாஜி தரப்பினர் முன்வைப்பர் என கூறப்படுகிறது.


Next Story