செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34-வது முறையாக நீட்டிப்பு


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34-வது முறையாக நீட்டிப்பு
x

செந்தில் பாலாஜியை வரும் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தன. தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 34-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவல் முடியும் ஏப்ரல் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அசல் ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்ககோரிய மனுவில் ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story