சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 April 2024 2:58 AM GMT (Updated: 23 April 2024 6:33 AM GMT)

ஆனந்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை,

தஞ்சையை அடுத்துள்ள பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆனந்த் (வயது27). கரகாட்ட கலைஞர். இவர் 16 வயது சிறுமியுடன் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளார்.

ரமேஷ், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story