''சென்னையில் விரைவில் நிலைமை சீராகும்'' - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


சென்னையில் விரைவில் நிலைமை சீராகும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை,

சென்னை செம்மஞ்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுசெய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவில் நிலைமை சீராகும். துரைப்பாக்கம், மணலி, ஆர்.கே.நகர் பகுதிகளில் இன்று மாலைக்குள் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story