பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Oct 2023 7:00 PM GMT (Updated: 7 Oct 2023 7:00 PM GMT)

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தில் பெருமாள் அவதரித்ததாக கூறப்படுவதால், அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், அவரது அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தநிலையில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜை

ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், மஞ்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்கார வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு பிரசாதம் செய்து வைத்து பக்தர்கள் பலர் கொடுத்தனர்.


Next Story