"சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் 'மிக்ஜம்' புயல்"


சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் மிக்ஜம் புயல்
x
தினத்தந்தி 3 Dec 2023 6:06 PM GMT (Updated: 3 Dec 2023 6:10 PM GMT)

புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. தற்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story