கிணற்றில் மூழ்கி மாணவன் பலி


கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
x

சிவகாசி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலியானான்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பாலகன் (வயது14). திருத்தங்கலில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை இவன் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளான்.

இந்தநிலையில் அவன் திடீரென கிணற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு மாணவன் பாலகனின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story