திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்


திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
x

எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கு காலக்கெடு வழங்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர்,

எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கு காலக்கெடு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அரசு கலைக்கல்லூரியில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க இம்மாதம் 28ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை 56 சதவீத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் வழங்கவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story