'உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்


உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
x

உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய காலத்தில் உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாகவும், வாட்ஸ் ஆப் மூலம் வரும் தகவல்களில் உண்மை செய்தி எது, பொது செய்தி எது என்பதை பிரித்து அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



Next Story