தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!


தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!
x

கோப்புப் படம் (பிடிஐ) 

நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், நாளை முதல் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.


Next Story