மனைவியை கத்தரிக்கோலால் குத்திய தையல் தொழிலாளி கைது


மனைவியை கத்தரிக்கோலால் குத்திய தையல் தொழிலாளி கைது
x

மனைவியை கத்தரிக்கோலால் குத்திய தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தாந்தோணிமலை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 49). தையல் தொழிலாளி. இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் 20 ஆண்டுகள் ஆகியும் இந்தம்பதிக்கு குழந்தை இல்லையாம்.

இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்க குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று முருகன் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு உள்ளார். அதற்கு ஆனந்தி பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் கத்தரிக்கோலால் ஆனந்தியின் வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த ஆனந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story