"இலவச திட்டங்களை சரியாக செயல்படுத்தியதால் தான் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இலவச திட்டங்களை சரியாக செயல்படுத்தியதால் தான் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

இலவசங்கள் தவறு என்ற வாதம் தவறு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இலவசங்கள் தவறு என்ற வாதம் தவறு என்று தெரிவித்தார்.

மேலும் இலவச திட்டங்களை யாருக்கு கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம் என்று தெரிவித்த அவர், இதனை சரியாக செயல்படுத்தியதால் தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக தெரிவித்தார்.


Next Story