மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் சாவு
x

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 42). இவர் பேரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி லாதா என்கின்ற மனைவியும் புகழேந்தி, சுவேதா என்கின்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 20-ந் தேதியன்று இரவு பாஸ்கரன் தனது மோட்டார் சைக்கிளில் சிவபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story