செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு


செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
x

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். தண்ணீரில் மூழ்கி இறப்பது தெரியாமல் அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.

காஞ்சிபுரம்

பிளஸ்-2 மாணவர்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நாலு ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன் (வயது 17). கோவூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களான சூர்யா (17), யுவராஜ் (17) ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றார். ஜெகதீசன், சூரியா இருவரும் ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.

ஏரியில் குளித்து கொண்டிருந்த ஜெகதீசன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்க சூர்யா முயன்றும் முடியவில்லை சூர்யா மட்டும் மேலே வந்துள்ளார். தனது நண்பர் நீரில் மூழ்கி இறப்பது தெரியாமல் யுவராஜ் தனது செல்போனில் அதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

உடல் மீட்பு

நண்பர் ஜெகதீசன் ஏரியில் மூழ்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் இதுகுறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று ஏரியில் மூழ்கி இறந்த ஜெகதீசனின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீச்சல் தெரியாமல் ஏரியில் மூழ்கி ஜெகதீசன் இறந்து போன காட்சிகள் அவரது நண்பர் செல்போனில் எடுத்த காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story