கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பெருமாநல்லூர் காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 22). இவர் நேற்று பெருமாநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்துக்கொண்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஹேமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை ஹேமச்சந்திரன் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி மண்டலம் கரகண்டாபுரம் கிராமத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.


Next Story