மீஞ்சூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது - 5 கிலோ பறிமுதல்


மீஞ்சூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது - 5 கிலோ பறிமுதல்
x

மீஞ்சூரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

மீஞ்சூர் வழியாக செல்லும் சென்னை வெளிவட்ட சாலை நெமிலிச்சேரி- வண்டலூர் வரை செல்கிறது. இந்த சாலையில் மீஞ்சூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீசார் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சத்தேகத்திற்கு இடமாக சுற்றிய ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடம் 5 கிலோ 132 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சீபாகில் (வயது 23) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story