செல்போன் பறித்த வாலிபர் கைது


செல்போன் பறித்த வாலிபர் கைது
x

செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் அருகே உள்ள வேடிச்சிபாலையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 48). இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, செல்போனை பறித்து சென்ற கடவூர் மேலப்பகுதி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story