மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் - வாலிபருக்கு 11 ஆண்டு ஜெயில்


மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் - வாலிபருக்கு 11 ஆண்டு ஜெயில்
x

மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு உத்தவிட்டுள்ளது.

சென்னை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவா(வயது 30). கடந்த 2019-ம் ஆண்டு இவர், மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த தகவலை அறிந்து கடந்த 2019-ம் ஆண்டு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர் மீதான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சி.திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சிவா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story