அயோத்தி ராமர் கோவிலுக்காக நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட ஆலய மணிகள்

பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர்.
நாமக்கல்,
அயோத்தி ராமர் கோவிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அக்கோவிலுக்காக ஆலய மணிகள் செய்து தருமாறு நாமக்கல்லில் உள்ள நிறுவனத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆர்டர் கொடுத்துள்ளார்.
அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர். மணிகளை தயார் செய்த தொழிலாளர்கள், தங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





