தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த பகீர் சம்பவம்


தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த பகீர் சம்பவம்
x

தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையனை போலீஸ் தேடுகிறது.

சென்னை

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த தெருவில் வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், பூங்கொடி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலி, 2 பவுன் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்தார். அதில் நிலைதடுமாறி பூங்கொடி அலறியபடி கீழே விழுந்தார். சற்று தூரம் அப்போது அவர் இழுத்து செல்லப்பட்டார். எதிரில் அந்த நேரத்தில் ஆட்டோ ஒன்று, பூங்கோடி மீது மோதுவது போல வந்து பிரேக் போட்டு நின்றது.

ஆட்டோ டிரைவர் பிரேக் போட்டதால், ஆட்டோ பூங்கோடி மீது மோதாமல் அவரை உரசியபடி நின்றது. இந்த சந்தடி சாக்கில் பூங்கொடி கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலி மற்றும் சிறிய சங்கிலி ஆகிய இரண்டையும் பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். நகையை இழந்த பூங்கொடி கதறி அழுதபடி சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அந்த காட்சி வீடியோ காட்சியாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் கொள்ளையனை தேடி வருகிறார்கள்.


Next Story