விவசாயியை கொடுவாளால் தாக்கியவர் கைது


விவசாயியை கொடுவாளால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:45 PM GMT)

சங்கராபுரம் அருகே விவசாயியை கொடுவாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் நடராஜன் (வயது 49). விவசாயி. சம்பவத்தன்று நடராஜனின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கருப்பாயி, அவரது நிலத்தில் வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவர், கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த நடராஜன், ஜெயக்குமாரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.


Next Story