இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் கதற கதற கடத்திய கும்பல் - மிரளவைக்கும் பின்னணி


இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் கதற கதற கடத்திய கும்பல் - மிரளவைக்கும் பின்னணி
x
தினத்தந்தி 3 Aug 2022 4:46 AM GMT (Updated: 3 Aug 2022 5:00 AM GMT)

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கதற கதற கடத்திய நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கதற கதற கடத்திய கும்பலை சார்ந்த மூன்று பேரை மயிலாடுதுறை போலீஸார் விக்கிரவாண்டி அருகே கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 12 பேருக்கு வலைவீச்சு ,வீடு புகுந்து பெண்ணை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு.

காதலிப்பதாக தகராறு

தஞ்சை, ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (வயது 34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார்.

அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை போலீசில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி, இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

அதன்பின்னர் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

வீடு புகுந்து கடத்தல்

இந்நிலையில் நேற்று இரவு ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக கதற கதற தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடி வந்தனர். கடத்தல் சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

மின்னல் வேகத்தில் காவல்துறை

காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் சோதனை செய்து அருகில் உள்ள மாவட்டங்களை உஷார் படுத்தினர். மயிலாடுதுறையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் விக்கிரவாண்டி அருகே மீட்கப்பட்டார்.

கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவன் கூட்டாளிகளான சுபாஷ் சந்திர போஸ் விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட மூன்று பேரை விக்கிரவாண்டி போலீசார் டோல்கேட் அருகே மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பெண் கடத்தலில் ஈடுபட்டவர்களை மயிலாடுதுறை போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story