பழனியில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது.!


பழனியில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது.!
x

பழனி முருகன் கோவிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப் கார் உள்ளது.

இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும். அதன்படி, நாளை முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story