வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x

வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (வயது 50). கணவனை இழந்த இவர், பூச்செடிகள் பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மாரியம்மாள் வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த 8-ந்தேதி காவனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார். பின்னர், உறவினர் வீட்டு திருமணம் முடிந்த பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தங்க சங்கிலி, டாலர், கம்மல் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளையும், 3 ஜோடி வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாரியம்மாள் நேற்று வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story